பணிவு காட்டுவதில் விஞ்சிவிட்டார்! திமுக எம்எல்ஏவுக்கு ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு

பணிவுக்குப் பணிவு காட்டும் தன்னையே திமுக எம்எல்ஏ புகழேந்தி விஞ்சிவிட்டார் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பணிவுக்குப் பணிவு காட்டும் தன்னையே திமுக எம்எல்ஏ புகழேந்தி விஞ்சிவிட்டார் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப் பேரவையில் சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து புகழேந்தி பேசும்போது, கைகளைக் கட்டிக் கொண்டு பவ்வியமாகப் பேசினார். இதையடுத்து, தனது பதில் உரையில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
பாலப் பருவத்தில் பள்ளிக்கூடத்தில் இருப்பதுபோல புகழேந்தி அவையில் கையைக் கட்டிக் கொண்டு பேசினார். பணிவுக்குப் பணிவு காட்டும் என்னையே (ஓ.பன்னீர்செல்வம்) விஞ்சிவிட்டார் என்றார்.
புகழேந்தி செய்ததை கேலி செய்யாமல் நகைச்சுவையாகவே முதல்வர் குறிப்பிட்டது அவையில் எம்எல்ஏக்களிடையே சிரிப்பை ஏற்படுத்திவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com