தொழில்நுட்ப கோளாறு காரணாமாக வல்லூர் அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மின் அலகு பிரிவில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக, திருவள்ளூர் மாவட்டம், வல்லூரில் அனல் மின்நிலையம் நிறுவப்பட்டு, மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணாமாக வல்லூர் அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மின் அலகு பிரிவில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலைமை சீரடைந்தவுடன் வழக்கம்போல் மின் உற்பத்தி தொடங்கும் என்று மின்நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
வல்லூர் அனல் மின்நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி திறனான 1500 மெகாவாட் மின் உற்பத்தியில், தற்போது 2-வது மின் அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது முதல் மற்றும் மூன்று அலகில் மட்டுமே 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.