சென்னை: பேரறிஞர் என்று போற்றப்படும் தமிழத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 48வது நினைவு தினம் இன்று.
அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலர் சசிகலா, அவருடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஆனால், அண்ணா மறைந்து 48 ஆண்டுகளில் முதல் முறையாக, திமுக தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரவில்லை.
தொடர்ந்து 47 ஆண்டுகளும் திமுக மூத்த தலைவர்களுடன் வந்து அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வந்த கருணாநிதி, உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நிலையைக் கருத்திக் கொண்டு அவர் இன்று அண்ணா நினைவிடத்துக்கு வரவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.