கன்னியாகுமரியில் இருந்து, கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பாததால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி, ராஜசங்கீத தெருவைச் சேர்ந்தவர் சாஜன் (32). இவர் தனக்குச் சொந்தமான வள்ளத்தில் அதே பகுதியைச் சேர்ந்த லாட்வின் (27), பிரசாத் (25), பிரிட்டோ (25), மைக்கிள் (26) ஆகியோருடன் கடந்த 30ஆம் தேதி இரவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றார். இவர்கள், 31ஆம் தேதி காலையில் கரைக்கு திரும்ப வேண்டும்.
ஆனால், 3 நாள்களாகியும் கரைக்குத் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர்களது உறவினர்கள் சின்னமுட்டம் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
மீனவர்கள் கரைக்குத் திரும்பாததால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கவலையடைந்துள்ளனர்.