அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 48-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திமுக மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர் உள்ளிட்டோர்.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திமுக மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர் உள்ளிட்டோர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 48-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தி.ராசகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் யோகா, ஒதிகை சரவணன், நித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருத்தணியில்...
திருத்தணி, பிப். 3: பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரம் பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை பொது விருந்து அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அண்ணா நினைவு நாளன்று திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு, பக்தர்களுக்கு பொது விருந்து நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு அண்ணாதுரையின் 48-ஆவது நினைவு நாளையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் காலை 11 மணிக்கு மூலவர், உற்சவ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து காவடி மண்டபத்தில் பக்தர்களுக்கு பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சி கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி தலைமையில் நடைபெற்றது. கோயில் தக்கார் வே.ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நகர்மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு, பொதுவிருந்தை தொடங்கி வைத்தார். இதில், ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் இணை ஆணையர் கவெனிதா, கோயில் அலுவலர்கள் ஆர்.கே.பேட்டை பழனி, சுப்பிரமணி, கார்த்திகேயன், அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டையில்...

பூண்டி, ஊத்துக்கோட்டையில் அதிமுக, திமுகவினர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.
பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில், நெய்வேலி கூட்டுச் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவருமான கந்தசாமி தலைமையில் அதிமுகவினர் அண்ணாவின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில், நிர்வாகிகள் கோவிந்தசாமி, தீனன், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டையில் முன்னாள் பேரூராட்சி தலைவரும், நகரச் செயலாளருமான ராசமாணிக்கம் தலைமையிலான அதிமுகவினர் சத்தியவேடு சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை
செலுத்தினர்.
இதில், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஷேக்தாவூத், அவைத்தலைவர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில்: பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சீத்தஞ்சேரியில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ஒன்றியச் செயலாளர் டி.கே. சந்திரசேகர், நிர்வாகிகள் விஸ்வநாதன், பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர், ஊத்துக்கோட்டை நகர திமுக செயலாளர் அப்துல் ரசீத் தலைமையில் திமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல், மாவட்ட நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com