அவனியாபுரம்: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் காளையர்கள் முன்பதிவு நிறைவு பெற்றது.
மதுரை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் 1,050 இளைஞர்கள் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர். இதே போல, 913 காளைகளும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. நாளை மீண்டும் காளைகளும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.