டெங்கு, பன்றிக் காய்ச்சல்: மேலும் 12 பேர் அனுமதி

டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, மேலும் 12 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, மேலும் 12 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பன்றிக் காய்ச்சல்: கோவை, கணபதியைச் சேர்ந்த சிவசக்தி (35). காரமடையைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் (67), பழனிசாமி (58). செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சாய்ரா பானு (57). நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் (58), ஸ்ரீபதி (25).
இவர்கள், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, சரவணம்பட்டியைச் சேர்ந்த நிக்சன் (44), வடமதுரையைச் சேர்ந்த ஜானகி (55), உக்கடத்தைச் சேர்ந்த ராமசாமி (75), குனியமுத்தூரைச் சேர்ந்த அஜ்மு நிஷா (77) ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப் போக்குக் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
டெங்கு பாதிப்பு: கோவை, உக்கடத்தைச் சேர்ந்த அரீபா (28), திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த ரஞ்சனி (25), கணுவாய் பகுதியைச் சேர்ந்த லக்ஷிதா (5 மாதம்) ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதனிடையே, கோவை, ரத்தினபுரியைச் சேர்ந்த ஆத்திகா (12), கணபதியைச் சேர்ந்த பிரசாந்த் (22), சூலூரைச் சேர்ந்த பகத் (10), பொள்ளாச்சியைச் சேர்ந்த வானதி (7), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகவி (8), சத்தியபிரியா (10), யமுனா (7), கலைச்செல்வி (25) ஆகியோர் தீவிரக் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com