தஞ்சாவூர்: தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டை அருகே இன்று ரயில்முன் பாய்ந்து கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விஏஓ வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விஏஓ வெங்கடேசனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.