செய்தித் துறை முன்னாள் செயலர் ராஜாராம், காந்தியடிகள் பற்றி எழுதிய "மகாத்மா காந்தியின் வாழ்வு காட்டும் பாடங்கள்' என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா, அருப்புக்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத் தலைவரும், ஜெயவிலாஸ் மற்றும் ஸ்ரீராமலிங்கா குழும தொழிலதிபருமான டி.ஆர்.தினகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் சிவஞானம் நூலை வெளியிட, மதுரை தியாகராசா நூற்பாலை நிர்வாக இயக்குநர் கருமுத்து க.ஹரிதியாகராஜன் பெற்றுக் கொண்டார்.
விழாவில், சிவானந்த யோகா மையத்தைச் சேர்ந்த பிரகலாத், விக்ரம் மருத்துவமனை என். நாராயணசாமி, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலாளர் முனைவர் மா.பா. குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.