மதிமுகவின் பொருளாளர் பதவிக்கான தேர்தல் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மதிமுக பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 26 -ஆம் தேதி (பிப்.26) கோவையில் நடைபெறும். பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு, பொதுக்குழு தகுதி பெற்ற 10 பேர் முன்மொழிந்தும், 15 பேர் வழிமொழிந்தும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.