கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே கடலோர மீனவ கிராமமான புதுக்குப்பத்திலிருந்து ஆறுமுகம் (36) உள்ளிட்ட 5 மீனவர்கள் சனிக்கிழமை காலை மீன் பிடிக்க படகில் கடலுக்குச் சென்றனர்.
முகத்துவாரம் அருகே சென்றபோது மீன்பிடி தளத்தின் சிமென்ட் காரை மீது படகு மோதி கவிழ்ந்தது. அப்போது, ஆறுமுகம் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்ற 4 பேரும் நீச்சலடித்து, ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டு கரை திரும்பினர். சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.