கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே கடலோர மீனவ கிராமமான புதுக்குப்பத்திலிருந்து ஆறுமுகம் (36) உள்ளிட்ட 5 மீனவர்கள் சனிக்கிழமை காலை மீன் பிடிக்க படகில் கடலுக்குச் சென்றனர்.
முகத்துவாரம் அருகே சென்றபோது மீன்பிடி தளத்தின் சிமென்ட் காரை மீது படகு மோதி கவிழ்ந்தது. அப்போது, ஆறுமுகம் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்ற 4 பேரும் நீச்சலடித்து, ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டு கரை திரும்பினர். சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com