சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். இந்த ராஜிநாமாவை ஏற்றுக்கொள்வதாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். கடிதத்தில், "தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பொறுப்பை ராஜிநாமா செய்கிறேன். ராஜிநாமாவை கனிவுடன் ஏற்றுக் கொண்டு டிசம்பர் 6-இல் நியமிக்கப்பட்ட அமைச்சர்களையும் விடுவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பன்னீர்செல்வத்தின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்திற்கு தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்.