மும்பை: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கலந்து கொள்வதாக இருந்த மும்பை நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் 2 நாட்களுக்கு ஆளுநர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகளில் வித்யாசாகர் ராவ் பங்கேற்பது ரத்து செய்யப்படுவதாகவும், நாளை காலை வித்யாசாகர் ராவ் சென்னை செல்வார் என்றும் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.