மத்திய அரசைக் கண்டித்து பிப்.20-ல் மாநில அளவில் மறியல்

புயலுக்கும், வறட்சிக்கும் நிதியுதவி அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிப்.20 -ல் மாநிலம் தழுவிய மறியல் நடைபெறும் என்றார் அக்கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.

புயலுக்கும், வறட்சிக்கும் நிதியுதவி அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிப்.20 -ல் மாநிலம் தழுவிய மறியல் நடைபெறும் என்றார் அக்கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
புதுக்கோட்டைக்கு திங்கள்கிழமை வந்த அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. நமக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற்றுதர மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சுமார் 200 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், 17 பேர் மட்டுமே தற்கொலை செய்துள்ளதாகக் தமிழக அரசு அறிவித்து நிவாரணம் வழங்கியது. இடதுசாரிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டங்களாலேயே தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
கடந்தாண்டில் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலையை, தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ. 2 ஆயிரம் கோடியை தாமதமின்றி வழங்க வேண்டும்.
வர்தா புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு கேட்டுள்ள தொகையில் முதல்கட்ட உதவியான ரூ. 1000 கோடியையும், வறட்சி பாதிப்புகளுக்காக தமிழக அரசு கேட்ட ரூ. 1000 கோடியையும் மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து வரும் 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது என்றார் முத்தரசன்.
நிர்வாகிகள் அழ. ராசு, கே.ஆர். தர்மராஜன், வீ. சிங்கமுத்து, எம்.என். ராமச்சந்திரன், ஜீவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com