முதல்வரின் கூடுதல் முதன்மைச் செயலர் சாந்த ஷீலா நாயர் ராஜினாமா

தமிழக முதல்வரின் கூடுதல் முதன்மைச் செயலராக இருந்த சாந்த ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முதல்வரின் கூடுதல் முதன்மைச் செயலர் சாந்த ஷீலா நாயர் ராஜினாமா


சென்னை: தமிழக முதல்வரின் கூடுதல் முதன்மைச் செயலராக இருந்த சாந்த ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில்,  முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதவியில் இருந்து சாந்த ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளார்.

2016ம் ஆண்டு முதல், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்த ஷீலா நாயர், திட்டக் குழுவின் தலைவராக இருந்தவர்.

தனது சொந்த காரணங்களுக்காக தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாக சாந்த ஷீலா நாயர் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாந்த ஷீலா நாயர் கூடுதல் முதன்மை செயலராக இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி என்றாலும், அவரது அனுபவமும், திறமையும் தனது அரசுக்கு தேவை என்பதால், அவருக்கு  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனிப்பிரிவு அதிகாரி பதவியைக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் அரசியல் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனின் பதவிக் காலம் மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் நிலையில், கடந்த வாரம் அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இன்று தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியும் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com