ஆளுநர் தலையிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆளுநர் தலையிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குறித்து ஸ்டாலின் கூறியது: முதல்வராக இருக்கக் கூடிய ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவினர் செயல்பட அனுமதிக்கவில்லை என்று ஏற்கெனவே திமுக சார்பில் கூறி வந்தோம். அதிமுக தொண்டர்களும் கூறினர். இப்போது, அதே கருத்தைத்தான் ஓ.பன்னீர்செல்வமும் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் அனைத்துமே மர்மமாக உள்ளது. முதல்வரையே மிரட்டி ராஜிநாமா கடிதம் வாங்கியுள்ளனர். ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. முதல்வரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் தமிழகத்தில் அரசே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு அரசியல் சாசனப்படி ஒரு அரசு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். நிலைமை எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com