ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகை ரத்து?

மகராஷ்ட்ராவில் இருந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவதாக இருந்து. அவை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக

சென்னை: மகராஷ்ட்ராவில் இருந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவதாக இருந்து. அவை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பொறுப்பு ஆளுநரும் மகராஷ்ட்ரா ஆளுநருமான வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து சென்னைக்கு இன்று வருவார் என்று கூறப்பட்ட நிலையில், அவரது வருகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தலைமைக்கு எதிரகா முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பியுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மெரீனா பேட்டிக்கு பின்னர் தமிழக அரசியல் சூழலில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீதும், சக அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com