கட்டாயம் ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்: முதல்வர் பன்னீர்செல்வம்

கட்டாயம் ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கட்டாயம் ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்: முதல்வர் பன்னீர்செல்வம்


சென்னை: கட்டாயம் ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், இன்று காலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுகவுக்கு எந்த நிலையிலும் துரோகம் செய்யவில்லை. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்து சிறப்பான ஆட்சியை நடத்திய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எந்த நிலையிலும் குறையில்லாமல் பணி செய்வேன்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையம் அமைக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று கூறினார்.

நீங்கள் ராஜினாமாவை திரும்பப் பெறுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என்று பதில் அளித்தார்.

பாஜகவால் நீங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ? குறித்த கேள்விக்கு, அது வடிகட்டிய் பொய் என்றார் பன்னீர்செல்வம்.

ஜெயலலிதாவுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில் 2 முறை முதல்வராக இருந்தேன். சட்டமன்றம் கூடும் போது எனது ஆதரவு தெரியும் என்றும் அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com