புது தில்லி: தமிழகத்தின் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சட்ட விதிமுறைகளை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் தான் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரநிதி. எனவே, தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய பிரச்சனைகளையும், சட்ட விதிமுறைகளையும் ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார். மேலும் தற்போதைய நிலமைகளை வைத்து பிறரை குற்றம் சாட்டுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.