திருச்சி, தஞ்சை, புதுகையில் மார்க்சிஸ்ட் கம்யூ. சாலை மறியல்

வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சியில்.... திருச்சியில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 255 பேரை போலீஸார் கைது செய்தனர். இதே போல, மாவட்டத்தின் 13 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 536 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வரதராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா உள்ளிட்ட 255 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சையில்... தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட 15 இடங்களில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், 750 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கோ. நீலமேகம், மாநகரச் செயலர் பி. செந்தில்குமார், ஒன்றியச் செயலர் எம். மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டையில்... புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களில், 75 பெண்கள் உள்பட மொத்தம் 378 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com