தீபாவுடன் பன்னீர்செல்வம் இணைந்து சசிகலா குடும்பத்துக்கு எதிராக போராட வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் பேட்டி

நாட்டின் முதல்வரையே மிரட்டியவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் கூறியுள்ளார்.

சென்னை: நாட்டின் முதல்வரையே மிரட்டியவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மலரவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிகலா குடும்பம் அதிமுகவினர் குடும்பமாக உள்ளது என்பதுதான் உண்மையே தவிர, அதிமுகவின் குடும்பமாக உள்ளது என்பது தவறு. மேலும், முதல்வர் பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
தற்போதைய நிலையில் ஆட்சியைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது. எனவே, தமிழக்தில் நடைபெறும் ஆட்சியைப் கலைத்து விட்டு பேரவைத் தேர்தலை நடத்த ஆளுநர் ஆவண செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பன்னீர்செல்வத்தை ஆட்சி நடத்த சசிகலா குடும்பம் ஒருபோதும் அனுமதிக்காது என மலரவன் குற்றம்சாட்டியுள்ளார். மரைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் பன்னீர்செல்வம் இணைந்து சசிகலா குடும்பத்துக்கு எதிராக போராட வேண்டும் மலரவன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com