தூத்துக்குடியில் வியாபாரி வீட்டில் 200 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில் வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து, 200 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து, 200 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்தவர் அற்புதராஜ். மீன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர், குடும்பத்தினருடன் புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு சென்றிருந்தார்.
திருவிழா முடிந்து, அற்புதராஜ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் இருந்த 200 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்துக்கு அற்புதராஜ் தகவல் தெரிவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீóஸ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
அற்புதராஜ் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, 200 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக வடபாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீன் வியாபாரியான அற்புதராஜின் தந்தை தொம்மை ஜேசுவடியான் தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆவார். தற்போது, திரேஸ்புரம் பகுதி திமுக செயலராக உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com