சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் புதன்கிழமை (பிப்.8) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
அதிமுக பேரவை உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பரபரப்பான சூழலில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்ததைத் தொடர்ந்து, அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
இதையடுத்து அதிமுக பேரவை உறுப்பினர்களின் கூட்டம் புதன்கிழமை காலை கூட்டப்பட்டுள்ளது.