மாநில நிர்வாகத்தை ஆளுநர் சீரமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழக நிர்வாகத்தைச் சீரமைக்கும் நடவடிக்கையில் ஆளுநர் வித்யா சாகர் ராவ் ஈடுபட வேண்டும் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மாநில நிர்வாகத்தை ஆளுநர் சீரமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழக நிர்வாகத்தைச் சீரமைக்கும் நடவடிக்கையில் ஆளுநர் வித்யா சாகர் ராவ் ஈடுபட வேண்டும் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
எனக்கு அரசியல் ஆசை இல்லை என்று கூறி, ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் மீண்டும் அடைக்கலம் தேடியவர் சசிகலா. ஆனால் இப்போது திடீரென்று அக்கட்சியின் பொதுச் செயலாளரானார். அது அவர்கள் உட்கட்சி பிரச்னை என்று கருதினோம்.
ஆனால், அதிமுக தொண்டர்கள், மக்கள் விருப்பத்துக்கு மாறாக முதல்வராகத் துடிக்கிறார் சசிகலா.
சசிகலா முதல்வர் ஆவதற்காக மக்கள் நிச்சயமாக வாக்களிக்கவில்லை.
இந்தச் சூழலில், இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் சட்ட வெற்றிடம் பற்றி, தமிழக ஆளுநர் தீவிர ஆலோசனை நடத்தி, மாநில நிர்வாகத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த நடவடிக்கையின் பின்னணியில் அடுத்து வர உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அமைய வேண்டிய நிலையான ஆட்சி ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மக்கள் விரும்பும் நல்லதொரு முடிவை ஆளுநர் எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com