மேட்டூர் அனல் மின் நிலைய 3-ஆவது யூனிட்டில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில், தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு பிரிவுகளும், 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு பிரிவும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கடந்த 4-ஆம் தேதி 210 மெகாவாட் திறன் கொண்ட பிரிவில், 3-ஆவது யூனிட்டில் கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டது. செவ்வாய்க்கிழமை பழுது சரிசெய்யப்பட்டதையடுத்து, 3-ஆவது யூனிட்டில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.