அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட வரும் அரசியல் தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்ய முடிவு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட வரும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளை, காவல்துறையினர் செய்து

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட வரும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளை, காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு அதிகம்பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
அப்போது, கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்ய, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை முடிவு செய்துள்ளது. மதுரை சரக டிஐஜி ஆனந்த்குமார் சோமானி தலைமையிலான குழுவினர் நேரம் ஒதுக்கீடு தொடர்பான பணிகளைத் திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும், முக்கியப் பிரமுகர்களுக்கு விழாக் குழு சார்பில் மரியாதை செய்யப்படும். அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு விதிகளின்படி விழா மரபுகள் பின்பற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளை வருவாய் கோட்டாட்சியர் ஜி.செந்தில்குமாரி தலைமையிலான அத்துறையினர் செய்து வருகின்றனர்.
வெளிநாட்டவர்கள் பெயர் பதிவு: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை முதல் தங்களது பெயர்களை இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக பதிவு செய்து வருவதாகவும் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com