ஆளுநர் இன்று சென்னை வருகை

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் வியாழக்கிழமை (பிப்.9) பிற்பகல் சென்னை வருகிறார்.
ஆளுநர் இன்று சென்னை வருகை

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் வியாழக்கிழமை (பிப்.9) பிற்பகல் சென்னை வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக பேரவை உறுப்பினர்களின் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஆளுநரை வியாழக்கிழமை சந்தித்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் கூறி, தம்மை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுப்பார் எனத் தெரிகிறது.
அதேசமயத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்கெனவே ஏற்றுள்ள நிலையில், அவர் தம்மைச் சந்திப்பதற்கு ஆளுநர் அனுமதி தருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எம்எல்ஏக்கள் பயணம் ரத்து: இதனிடையே, ஆளுநர் வித்யாசாகர் ராவ் வியாழக்கிழமை சென்னை வருகை உறுதியானதையடுத்து, புதன்கிழமை இரவு தில்லி செல்லவிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் தில்லி பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com