கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பேட்டையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான நட்சத்திர விடுதியில் அதிமுக பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சில உறுப்பினர்கள் மற்றொரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நட்சத்திர விடுதி அருகே 500 மீட்டர் முன்பாகவே பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக எந்த அதிமுக பேரவை உறுப்பினர்களும் சென்று விடாமல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.