சென்னை: சசிகலாவை அதிமுக நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பன்னீர்செல்வத்தும் வீட்டிற்கு நேரில் சென்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவு தெரிவித்து தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து வரும் மதுசூதனன், அதிமுக ரவுடிகளின் கூடாரமாக மாறிவிடக்கூடாது. எம்ஜிஆர் தொடங்கிய இயக்கம் ஒரு குடும்பத்திற்குள் அடங்கிவிடக்கூடாது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன். யாருடைய வற்புறுத்தலும் இன்றி பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.