சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியதால் சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீஸார் சார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தியது போன்று முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தபோவதாக சமூக வலைதளங்கள் மூலம் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் சென்னை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரையில் 500 அதிரடிப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக நலக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களை போலீஸார் வாடகைக்கு எடுத்துள்ளனர்.