'போயஸ்தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும்'

சென்னையிலுள்ள போயஸ் தோட்ட இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு

சென்னையிலுள்ள போயஸ் தோட்ட இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லம் அவரின் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.
புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நான் முதல்வராகப் பொறுப்பு ஏற்பேன்.
2012-க்குப் பிறகு சசிகலாவிடம் நான் பேசியதே இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குப் பிறகே அவரிடம் பேசினேன். ஜெயலலிதா கூறிய பணிகளை மட்டுமே செய்து வந்தேன். ஜெயலலிதா தனது அரசியல் வாரிசாக யாரையும் அடையாளம் காட்டவில்லை.
ஆளுநரைச் சந்திப்பேன்: ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வியாழக்கிழமை (பிப்.9) வந்தவுடன் அவரைச் சந்திப்பேன் என்றார் பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com