மதிமுக பொருளாளராக கணேசமூர்த்தி தேர்வு

மதிமுக பொருளாளராக அ.கணேசமூர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதிமுக பொருளாளராக கணேசமூர்த்தி தேர்வு

மதிமுக பொருளாளராக அ.கணேசமூர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:
மதிமுகவில் நிரப்பப்பட வேண்டிய கட்சியின் பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு, கோவையில் வரும் 26 -ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக் குழுவில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கட்சிப் பொருளாளராக அ.கணேசமூர்த்தியும், துணைப் பொதுச் செயலாளராக ஏ.கே.மணியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அதுபோல ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், க.சந்திரசேகரன், மு.பூமிநாதன், க.ஜெயசங்கர் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என வைகோ தெரிவித்துள்ளார்.
உயர்நிலைக் குழு உறுப்பினர்கள்: மேலும், மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக வழக்குரைஞர் செ.வீரபாண்டியன், என்.சுப்பிரமணியன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com