தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சமூக பங்களிப்பு நோக்குடன் இரு முதியோர் இல்லங்களுக்கு நிதி வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன் பேசும்போது, "ஸ்ரீநடேசன் பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் ஏழை, எளிய மக்கள் உதவி செய்வதற்காக நிதி திரட்டி உதவி வருகின்றனர்.
இந்த ஆண்டு மாணவர்கள் ரூ.85 ஆயிரம் நிதி திரட்டியுள்ளனர். அந்த நிதியின் மூலம் அவர்கள், தாம்பரத்தில் செயல்பட்டு வரும் இரு முதியோர் இல்லங்களுக்கும், பெருங்களத்தூரில் உள்ள வேத பாடசாலைக்கும், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் உதவி உள்ளனர்' என்றார்.