சென்னை: தமிழக அரசியல் சூழ்நிலையில் விரைந்து முடிவடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்வது குதிரை பேரங்களுக்கு வழி வகுத்து விடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் தற்போது நிலவும் அதிகார சிக்கலுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
பெரும்பான்மையான பலம் யார் பக்கம் உள்ளது என்பதை உணர்ந்து நிலையான ஆட்சி அமைய வழி செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் தாமதம் செய்வது மோசமான குதிரை பேரங்களுக்கு வழி வகுத்து விடும்.
இவ்வாறு திருமாவளவன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.