சென்னை: அதிமுகவின் அவைத்தலைவர் பதவியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அறிவித்துள்ளார்.
அதிமுகவுக்கும் களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவைத்தலைவராக இருந்து வந்த மதுசூதனன் அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுங்க பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதவிக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்த தகவல்கள் வெளியானதும் அதிமுகவின் அவைத்தலைவர் பதவியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அதிரடியாக அறிவித்துள்ளார்.