சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை என்று செந்தில்குமார் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை கொடிமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லத்திலும் இல்லை. அவருடை தொலைப்பேசியும் செயலிழப்பில் உள்ளதால், அவரை கண்டுபிடித்து தருமாறு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.