சென்னை: தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகரராவை தமிழக காவல்துறை தலைவர் டி கே.ராஜேந்திரன் சந்தித்து பேசி வருகிறார்.
இன்று காலை தமிழக ஆளுனர் மாளிகையில் இருந்து தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரனனுக்கு நேரில் வந்து சந்திக்குமாறு அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து ராஜேந்திரன் உடனடியாக கிண்டி ஆளுநர் மாளிகைக்கு விரைந்து சென்றார். அங்கே தற்போது இருவரும் சந்தித்து பேசி வருகின்றனர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இருவரும் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.