முதல்வர் ஓ.பி.எஸ்.ஸுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் வியாழக்கிழமை (பிப்.9) சந்தித்து

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் வியாழக்கிழமை (பிப்.9) சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சட்டம்-ஒழுங்கு விவகாரம் தொடர்பாக அவர்கள் ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை மேற்கொள்ள உள்ளது தொடர்பாக கூட்டத்தில் அவர்கள் ஆலோசித்தனர். மேலும்,காவல் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் அவ்வப்போது ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வருவதும் போவதுமாக இருந்தனர்.
முன்னாள் அமைச்சர்கள்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லம் வியாழக்கிழமை காலை முதலே பரபரப்புடன் காணப்பட்டது. அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்பட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வந்து ஆலோசனையில் ஈடுபட்டனர். ஐநூறுக்கும் மேற்பட்ட அதிமுகவின் தொண்டர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com