யானை தாக்கியதில் விவசாயி காயம்

பேர்ணாம்பட்டு அருகே யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பலத்த காயமடைந்தார்.

பேர்ணாம்பட்டு அருகே யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பலத்த காயமடைந்தார்.
பேர்ணாம்பட்டை அடுத்த அத்திகுப்பத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ் (44). இவருக்குச் சொந்தமான நிலம் வன எல்லைப் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் துவரை பயிரிட்டுள்ளார்.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு, நிலத்தில் காவல் காக்க சென்றுள்ளார். அப்போது, ஒரு குட்டியுடன் 3 யானைகள் அங்கு வந்துள்ளன. அதில் ஒரு யானை கோவிந்தராஜை தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவலின் பேரில் பேர்ணாம்பட்டு வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வனவர் சங்கரய்யா உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com