அதிமுக பொதுச் செயலர் பதவிக்கு விரைவில் தேர்தல்

அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன் கூறினார்.
அதிமுக பொதுச் செயலர் பதவிக்கு விரைவில் தேர்தல்

அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன் கூறினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மதுசூதனன் அளித்த பேட்டி:-
அதிமுக சட்டத் திட்ட விதிகளின்படி, பொதுச்செயலராக இருப்பதற்கு சசிகலா தகுதியற்றவர். கட்சியின் அவைத் தலைவரான நானும் (மதுசூதனன்), பொருளாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த உள்ளோம். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
பொதுச்செயலரை தொண்டர்கள்தான் முடிவு எடுப்பார்கள். தாற்காலிக பொதுச்செயலர் என்பது அதிமுக வரலாற்றில் இல்லை.
தேர்தலுக்குத் தயாராகுங்கள்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாகூட பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிடும்போது, தேர்தல் தேதியை அறிவிப்பார். குறிப்பிட்ட தேதிக்குள் யாரும் போட்டியிட முன்வராவிட்டால், ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆகவே, தேர்தலுக்குத் தயாராகுங்கள் என விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
சொத்துக் குழு அமைக்கப்படும்: ஜெயலலிதாவால் சேர்த்து வைக்கப்பட்டுள்ள சொத்துகளைப் பராமரிப்பதற்காக, சொத்து பாதுகாப்புக் குழு விரைவில் பொதுக்குழுவால் அறிவிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com