தமிழக அரசியல் நிலவரம் குறித்து எந்த அறிக்கையையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பவில்லை என்று அவரது முதன்மைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
"தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ ஆளுநர் வித்யா சாகர் ராவ் எந்த அறிக்கையையும் அனுப்பவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.