சென்னை: கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் பொதுச் செயலர் சசிகலா நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது.
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து இன்று பிற்பகலில் புறப்பட்ட சசிகலா, கூவத்தூர் சென்று அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு சசிகலா எழுதிய கடிதத்தில், தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கும்படியும், அப்போது என்னுடன் வரும் அனைத்து எம்எல்ஏக்களையும் உடன் வர அனுமதிக்கும்படியும் கோரியிருந்தார்.
இதனை முன்னிட்டுத்தான், அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து சசிகலா ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.