சென்னை: கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை சந்திக்க அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா புறப்பட்டார்.
அதிமுக எம்எல்ஏக்களுடன் சென்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை சந்திக்க திட்டமிட்டுள்ள சசிகலா, அது குறித்து எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த கூவத்தூர் புறப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரியும், தன்னுடன் வரும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் சந்திப்பின் போது அனுமதி அளிக்குமாறும் சசிகலா ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.