சென்னை: சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து நான்காவது நாளாக சட்டவிரோதமான, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து தனியார் நட்சத்திர விடுதியில் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, செய்திகள் சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்களை செய்தியை சேகரிக்க விடாமல் அங்கிருந்த அதிமுகவின்ர் சிலர் செய்தியாளர்கள் மீது கற்களை வீசு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.