விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலை ஒன்றில் இன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை நிகழ்ந்த திடீர் வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமைடந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் மேலும் யாரவது சிக்கியிருக்கிறார்களா என தேடி வருகின்றனர். வெடிவிபத்துக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. வெடிவிபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்து வருகின்றனர்.