திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.69 லட்சம் மதிப்புள்ள தங்கம், சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்

சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 9.69 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 9.69 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த சரவணன் என்ற பயணி, தனது உடைமைகளுக்கு நடுவே வைத்திருந்த எல்இடி அடாப்டருக்குள் 100 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம்.
இதேபோல சிங்கப்பூர், மலேசியா, துபை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த பல்வேறு பயணிகள் கொண்டு வந்த இந்தியாவில் தடை செய்யப்பட்ட சிகரெட் 669 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 6.69 லட்சம். இதுகுறித்து சுங்கத் துறையினர் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com