சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சரும், சசிகலாவுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தவருமான பொன்னையன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு நேரில் வந்த பொன்னையன், தனது ஆதரவை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே 2 எம்.பிக்களும், அமைச்சர் மாஃபா பாண்டியனும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், தற்போது பொன்னையனும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்துள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.