தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, பாஜக எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். ஆளுநர் மாளிகையில் மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய இந்தச் சந்திப்பு அரைமணி நேரம் வரை நீடித்தது.
சசிகலாவுக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டுமென சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த விஷயத்தில் ஆளுநர் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது எனவும், சட்ட விதிகள் உள்பட அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டுமெனவும் தமிழக பாஜக தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பாஜக எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.