இரு அதிமுக எம்எல்ஏக்கள் மாயம்: காவல் நிலையத்தில் புகார்

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களை காணவில்லை என்று காவல் நிலையங்களில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களை காணவில்லை என்று காவல் நிலையங்களில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், வானூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணியை காணவில்லை என்று அத்தொகுதிக்குள்பட்ட கோட்டக்குப்பம் இந்திரா நகரைச் சேர்ந்த அதிமுக நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் சிவமணி (45) தலைமையிலான அக்கட்சியினர் சனிக்கிழமை அங்குள்ள காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தனர்.
உளுந்தூர்பேட்டையிலும்... : இதேபோல, உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி, புதுதெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ்குமார், தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் குமரகுருவை காணவில்லை என்றும், மர்ம நபர்கள் சிலர் அவரை கட்டாயப்படுத்தி அவரை அடைத்து வைத்துள்ளனர்.
அவரை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்று உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக, காவல் துணை கண்காணிப்பாளருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com