எம்எல்ஏக்களின் கையெழுத்துகள்: ரகசிய விசாரணை

வி.கே.சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் கையெழுத்துகளைப் பரிசோதிக்கும் பணியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஈடுபட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

வி.கே.சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் கையெழுத்துகளைப் பரிசோதிக்கும் பணியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஈடுபட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த புகார்களையடுத்து, இந்தப் பணி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக எம்எல்ஏக்கள் பதவியேற்றபோது கையெழுத்திட்ட படிவங்களை சட்டப் பேரவைச் செயலகத்திடம் இருந்து ஆளுநர் மாளிகை கேட்டுப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் தரப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல்வேறு புகார்கள் தொடர்பாகவும் ஆளுநர் மாளிகை ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காகவே ஆட்சி அமைக்க அழைப்பதில் என்பதில் ஆளுநர் காட்டி வரும் தாமதத்துக்கு ஒரு காரணமாகும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com